தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே, உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
கார் அமர் மேனி கணபதியே நிற்கக் கட்டுரையே.
கொன்றைப் பூவையும், சண்பக மாலையையும் சூடியுள்ள, தில்லை ஈசனின் இடது பாகத்தில் இடம் பிடித்துள்ள உமையின் மகனே! கரிய நிறத் திருமேனி கணபதியே! ஏழு உலகங்களையும் காக்கும் புகழ் வாய்ந்த அபிராமி அன்னையின் மீது யான் பாடத் தொடங்கும் அந்தாதி, என் உள்ளத்துள் என்றும் நிலை பெற்று விளங்க அருள் புரிவாய்.