#012. கண்ணியது உன் புகழ்

# 12. புண்ணியம் வியத்தல்.

கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே! புவி ஏழையும் பூத்தவளே!

ஏழு உலகங்களையும் மலரச் செய்த நாயகியே! நான் கருதுவது உன் புகழையே; கற்பது உன் பெயர்களையே; உள்ளம் உருக பக்தி செய்வது உன் பாத மலர்களிலே; உன்னை விரும்பும் அடியவர் அவையிலே பகலை இரவாக மாற்றியவளே; நான் முற்பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ?