தேவியின் உறுதி மொழி (9)

தேவி ஸ்துதி (பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது).

# 15.

மயூர குக்குட வ்ருதே மஹாச’க்தி த4ரோனகே4 |
கௌமாரீ ரூப ஸம்ஸ்தாநே நாராயணீ நமோஸ்துதே ||

கௌமாரீ தேவியாக வடிவம் எடுத்துப் பெரிய வேலாயுதத்தைத் தங்கியவளே! மயிலும், சேவலும் சூழப் பெற்றவளே! பாபமற்றவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.

# 16

ச’ங்க சக்ர க3தா3 சா’ர்ங்க3 க்3ருஹீத பரமாயுதே4 |
ப்ரஸீத வைஷ்ணவி ரூபே நாராயணீ நமோஸ்துதே ||

வைஷ்ணவீ தேவியாக வடிவம் எடுத்து சங்கு, சக்கரம், கதை, வில் ஆகிய சிறந்த ஆயுதங்களை ஏந்தியவளே! நாராயணீ தேவியே! அருள் புரிவாய்!

Leave a comment