#020. உறைகின்ற நின் திரு

# 20. உறைவிடம் யாது?

உறைகின்ற நின் திருக்கோயில் நின்கேள்வர் ஒரு பக்கமோ,  
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ, கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.

பரிபூரண நித்திய கல்யாணியே!
நீ உறையும் இடம் உன் கணவரின் இடப்பக்கமா?
நான்கு வேதங்களின் முதலிலா அன்றி முடிவிலா?
அமுதம் பொழியும் நிலவிலா?
தாமரை மலரிலா? பாற்கடலிலா?
அடியேன் நெஞ்சிலா? கூறு தாயே!