#025. பின்னே திரிந்து

# 25. உன்னை மறவேன்!

பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணிப் பிறப்பு அறுக்க,
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே? இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே!

மும்மூர்த்திகளின் அன்னையே! மூன்று உலகங்களிலும் அபிராமி என்று போற்றப்படும் அருமருந்தே! உன் அடியார்களைப் பின்பற்றிப் போற்றிப் பிறவிப் பிணியை அறுக்க, முற்பிறவியில் நான் தவங்கள் செய்தேன். உன்னை என்றும் மறவேன். உன் புகழ் பாடி உன்னை ஏத்துவேன்.