#074. நயனங்கள் மூன்றுடை

# 74. மறுமைப் பயன் 

நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்
அயனும், பரவும் அபிராமவல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும் , பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

முக்கண்ணன் ஆகிய சிவபெருமானும், நான்கு வேதங்களும் , திருமாலும், பிரமனும் போற்றி வழிபடும் அன்னையின் இரு திரு அடிகளைத் தம் பிறவியின் பயன் என்று போற்றி வணங்குகின்ற அன்பர்கள்; கற்பகச் சோலையில் தங்கக் கட்டிலில் அமர்ந்து, அரம்பையர்களின் ஆடல் பாடல்களை அனுபவிக்கும் சுவர்க்க லோக இன்பத்தைப் பெறும் தேவர்கள் ஆவார்கள்.