# 17.
க்3ருஹீதோக்3ர மஹாசக்ரே த3ம்ஷ்ட்ரோத்3த்4ருத வஸுந்த4ரே|
வராஹ ரூபிணி சி’வே நாராயணீ நமோஸ்துதே ||
தெற்றுப் பல்லில் பூமியையே தூக்கிக் கொண்டு நின்ற வராஹரூபம் தரித்து, பெரிய சக்கராயுதத்தை ஏந்திய மங்கள வடிவினளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.
# 18
ந்ருசிம்ஹ ரூபேணோக்3ரேண ஹந்தும் தை3த்யான் க்ருதோத்3யமே |
த்ரைலோக்ய த்ராண ஸஹிதே நாராயணீ நமோஸ்துதே ||
உக்கிரமான நரசிம்ஹ வடிவம் எடுத்துக்கொண்டு, மூவுலகையும் காப்பதற்காக அசுரர்களைக் கொல்ல முற்பட்டவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.