#015. தண்ணளிக்கு என்று

# 15. அடையும் பேறுகள்.

தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ?
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.

பண் அமையும் இனிய குரலும், இயற்கை நறுமணமும் வாய்ந்த பைங்கிளியே! உன் அருள் வேண்டி முற்பிறவிகளில் தவம் இயற்றியவர்கள் இவ்வுலகச் செல்வங்களை மட்டுமோ பெறுவர்? விண்ணுலகச் செல்வங்களையும், அழியாத முக்தியையும் அடைவர் அன்றோ?