தேவியின் உறுதி மொழி (4)

தேவி ஸ்துதி (பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது).

வித்3யா: ஸமஸ்தாஸ் தவ தே3வி பே4தா3:
ஸ்த்ரிய: ஸமஸ்தா: ஸகலா ஜக3த்ஸு |
த்வயைகயா பூரித மம்ப3யைதத்
கா தே ஸ்துதி: ஸ்தவ்ய பராபரோக்தி: || (6)

எல்லா வித்தைகளும் உனது அம்சங்களே ஆகும். கலையுடன் கூடிய எல்லாப் பெண்களும் உன்னுடைய வெவ்வேறு வடிவங்களே ஆவார்கள். உன்னாலேயே உலகு முழுவதும் நிறைந்து உள்ளதால் நீயே அனைத்துக்கும் ஒரே தாய். துதி செய்வதற்கு உரிய பரமும் அபரமும் ஆகிய வாக்குகளே நீ என்னும் போது, உன்னைத் துதிப்பது எங்கனம் என்று கூறு?

Leave a comment