#069. தனம் தரும், கல்வி தரும்

# 69. இம்மைப் பயன்கள்.

தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வவடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள், அபிராமி கடைக்கண்களே.

மலர்கள் செறிந்த கூந்தலை உடைய அபிராமி அன்னையின் கடைக்கண் பார்வையே அவள் அன்பர்களுக்குச் செல்வங்களைத் தரும்; கல்வியையும், தளர்வு அடையாத மனத்தையும், தெய்வீக அழகையும், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாத நல்ல சுற்றத்தினரையும், மற்றும் எல்லா நலன்களையும் அளிக்கும்.