#031. உமையும் உமையொரு

# 31. ஆட்கொண்ட திறம்.

உமையும், உமையொரு பாகனும், ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்
சமயங்களுமில்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.

உமையும், உமையொருபாகனும் என் கனவில் தோன்றி என்னை அவர்கட்க்கு மெய்யன்பர் ஆக்கினர். எனவே இனி நான் சிந்திப்பதற்கு வேறு சமயங்கள் ஏதும் இல்லை. என்னை ஈன்று எடுத்த தாயும் வேறில்லை. மங்கையர் மீது எனக்கு காதலும் இல்லை.