#079. விழிக்கே அருள் உண்டு

# 79. கயவர்கள் தொடர்பு எதற்கு?

விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு; அவ்வழி கிடைக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?

அபிராம வல்லியின் விழிகளே அருளைக் காட்டும். வேதம் சொன்னபடி வழிபட நமக்கு மனம் உண்டு. அப்படி இருக்கையில், பழிச் செயல்களில் சிக்கிச் சுழன்று, பல பாவங்களைச் செய்து, பாழ் நரகத்தின் குழியில் அழுந்தும் கயவர்களுடன் நமக்கு என்ன தொடர்பு? நமக்கு என்ன தொடர்பு? நமக்கு என்ன தொடர்பு?