தேவியின் உறுதி மொழி (23)

# 45.

ததோ மாம் தே3வதா : ஸ்வர்கே3 மர்த்ய லோகே சா மானவா: |
ஸ்துவந்தோ வ்யாஹரிஷ்யந்தி ஸததம் ரக்த த3ந்திகாம் ||

அதனால் சுவர்க்கத்தில் உள்ள தேவர்களும், மனித உலகில் வாழும் மனிதர்களும் என்னை ‘ரக்ததந்திகா’ என்ற பெயரால் குறிப்பிடுவார்கள்.

# 46.

பூ4யச்’ச ச’த வார்ஷிக்யா மனாவ்ருஷ்ட்யா மனாம்ப4ஸி |
முனிபி4:ஸம்ஸ்துதா பூ4மௌ ஸம்பவிஷ்யாம்யயோநிஜா ||

மறுபடியும் நூறு வருடங்கள் மழை பெய்யாமல் இருக்க, முனிவர்களால் துதிக்கப்பட்டு நீரின்றி வறண்ட பூமியில், கர்ப்பவாசம் செய்யாமலேயே நான் தோன்றுவேன்.

Leave a comment