#002. துணையும் தொழும்

# 2 எல்லாம் அவளே!

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்

பணையும் கொழுந்தும், பதி கொண்ட வேரும் பனிமலர் பூங் 
கணையும், கறுப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

நமக்குத் துணையாகவும், குல தெய்வமாகவும், பெற்ற அன்னையாகவும், வேதங்களின் கிளையாகவும், கொழுந்தாகவும், அடி வேராகவும் விளங்குபவள், குளிர்ந்த மலர்க் கணைகளும், கரும்பு வில்லும், அங்குச பாசமும் கைகளில் ஏந்திய திரிபுர சுந்தரியே என்று அறிந்துகொள்வோம்.