#089. சிறக்கும் கமலத்திருவே

# 89. என் முன்னே வர வேண்டும்!

சிறக்கும் கமலத் திருவே; நின்சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தரவந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.

சிறந்த செந்தாமரையில் வீற்றுள்ள திருமகளே! சிவபிரானும், நீயும்; என் உடம்பும் உயிரும் தொடர்பு அற்று அறிவை மறந்திடும் பொழுதினில், துரியாதீத நிலையில், தூங்காமல் தூங்கி சுகம் பெறும் அனுபவத்தை எனக்கு அருள்வதற்கு, வலிந்து வந்து காட்சியும் அளித்து, உங்கள் சீரிய திருவடிகளை என் சிரம் மீது வைத்து அருளிட வேண்டும் தாயே!