1. ஸுப்ரமண்ய ஸ்துதி

e1

நீலகண்ட2வாஹனம் த்3விஷட்3பு4ஜம் கிரீடினம்
லோல ரத்ன குண்ட3ல ப்ரபா4பி4ராம ஷண்முக2ம் |
சூ’ல ச’க்தி த3ண்ட3குக்குடாக்ஷ மாலிகாத4ரம்
பா3லமீச்’வரம் குமார சை’ல வாஸினம் பஜே || (1)

மயில் வாஹனன்; பன்னிரு புஜங்களை உடையவன்; கிரீடம் தரித்தவன்; அசைந்து ஆடி ஜொலிக்கும் இரத்தின குண்டலங்களின் காந்தியில் அழகாக விளங்கும் ஆறு முகங்களை உடையவன்; சூலாயுதம், வேலாயுதம், கதாயுதம், சேவற்கொடி, அக்ஷ மாலை இவைகளைத் தாங்கியவன்; பால ரூபம் கொண்டவன்; குமர மலையில் எழுந்தருளி இருப்பவன் ஆகிய சுப்ரமண்யனை நான் பூஜிக்கின்றேன்.

Leave a comment