தேவியின் உறுதி மொழி (20)

# 35.

ப்ரணதானாம் ப்ரஸீத த்வம் தே3வி விச்’வார்த்தி ஹாரிணி |
த்ரைலோக்ய வாஸீனாமீட்3யே லோகானாம் வரதா3 ப4வ ||

தேவி! மூன்று உலகங்களில் வசிப்பவர்களும் போற்றுபவளே! உலகனைத்தின் இன்னல்களைப் போக்குகின்றவளே! நீ உலகங்களுக்கு சிறந்த நன்மைகளையே புரிவாய். உன்னை வணங்குவோருக்கு அருள் பாலிப்பாய்.

# 36.

தே3வ்யு வாச||

# 37.

வரதா3ஹம் ஸுரக3ணா வரம் யன் மனசேச்ச2த |
த்வம் வ்ருணுத்4வம் ப்ரயச்சா2மி ஜக3தமுபகாரகம் ||

தேவி கூறியது :-
தேவ கணங்களே!உலகுக்கு பயன் அளிக்கும் எந்த வரத்தையும் நீங்கள் என்னிடம் கோரலாம். நான் அதை உங்களுக்கு அளிப்பேன்.

Leave a comment