தேவியின் உறுதி மொழி (17)

# 31.

வித்3யாஸு சா’ஸ்த்ரே ஷு விவேக தீ3பேஷ் –
வாத்3யே ஷு வாக்யே ஷு ச கா த்வத3ன்யா |
மமத்வக3ர்தேதி மஹாந்த4காரே
விப்4ராமயத்யேத த3தீவ விச்’வம் ||

வித்தைகளிலும், சாஸ்திரங்களிலும், விவேகத்தின் விளக்காகிய வேதங்களின் வாக்கியங்களிலும் பேசப்படுவது உன்னை அன்றி வேறு எவர்? இவ்வுலகை மமதையால் கவ்வப்பட்ட கொடிய அஞ்ஞான இருளில் உழலவும், சுழலவும் வைப்பது உன்னை அன்றி வேறு எவர்?

# 32.

ரக்ஷாம்ஸி யத்ரோக்3ர விஷாச்’ச நாகா3
யத்ராரயோ தச்’யுப3லானி யத்ர |
தா3வானலோ யத்ர ததா2ப்3தி4 மத்3யே
தத்ர ஸ்தி2தா த்வம் பரிபாஸி விச்’வம் ||

ராக்ஷசர்கள் உள்ள இடத்திலும், கொடிய விஷ நாகங்கள் உள்ள இடத்திலும், சத்ருக்கள் நிறைந்த இடத்திலும், திருடர்கள் கூட்டம் நிறைந்துள்ள இடத்திலும், காட்டுத் தீ பரவிய இடத்திலும், நடுக்கடலிலும், அங்கங்கு இருந்தவாறு நீயே உலகை எல்லாம் ரக்ஷிக்கின்றாய்.

Leave a comment