#010. நின்றும் இருந்தும்

10. எப்போதும் உன்னை வணங்குவேன்.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முக்தி ஆனந்தமே.

எழுதப் படாத வேதங்களின் அரிய பொருளே! அருள் மயமானவளே! இமயத்தில் பிறந்த உமையே!
அழியாத முக்தியின் இன்பமே! நான் நிற்கும் போதும், அமர்ந்து இருக்கும் போது, உறங்கும் போதும், நடக்கும் போதும் உன்னையே எண்ணுகின்றேன். உன்னையே வணங்குகின்றேன்.