#034. வந்தே சரணம் புகும்

# 34. உன் இருப்பிடங்கள் இவை.

வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே
 பரிவோடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்,
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமமும், பாகமும் பொற்
செந்தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.

அடைக்கலம் புகும் அடியவர்களுக்கு விண்ணுலக வாழ்வை அளித்துவிட்டு; தேவி பிரமனது நான்கு முகங்களிலும், திருமாலின் மார்பிலும், சிவபிரானுடைய இடப்பாகத்திலும், பொற்றாமரை மலரிலும், அம்மலரை மலர வைக்கும் சூரிய வடிவிலும், சந்திர ஒளியிலும் வீற்று இருப்பாள்.