# 67. வணங்காதவர்கள் அடையும் துயர்.
தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனதில் வையாதவர் வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி நாளும் குடில்கள் தோறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பார் எங்குமே
மின்னல் போன்ற உன் அழகிய தோற்றத்தை ஒரு நொடிப் பொழுதேனும் வணங்கி மனதில் எண்ணாதவர்கள்; கொடை, நற்குடிப் பிறப்பு, கோத்திரம், கல்வி , நற்பண்பு எல்லாம் குன்றிவிட; வீடுகள் தோறும் சென்று பாத்திரம் ஏந்திப் பிச்சை எடுக்கும் துன்பம் அடைவார்.