#001. உதிக்கின்ற செங்கதிர்

1 . என் விழுத்துணை அவளே.

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கொடி குங்குமத் தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என் விழுத் துணையே.

உதிக்கின்ற சூரியனும், நெற்றியின் உச்சியில் இட்ட திலகமும், நன்மதி உடையோர் மதிக்கின்ற மாணிக்கமும், மாதுளை அரும்பும், மின்னல் கொடியும், நறுமணக் குங்குமமும் போன்று தொன்று தொட்டுப் போற்றப்படுகின்ற திருமேனியை உடைய அபிராமி அன்னையே எனக்கு சிறந்த துணை ஆவாள்.