#003. அறிந்தேன் எவரும்

# 3 . அறிந்ததும், செறிந்ததும்

அறிந்தேன் எவரும் அறியா மறையை; அறிந்து கொண்டு
செறிந்தேன், உனது திருவடிக்கே; திருவே வெருவிப்
பிரிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாகிய மனிதரையே.

என் அன்னையே! எவரும் அறியாத மறையின் பொருளை உன் அருளால் அறிந்து கொண்டேன். அதன் பயனாக, உன் அன்பர்களின் பெருமையை மதிக்காத தீ வினையாளர்களை  விட்டு விலகி  திருவடிகளிலேயே நான் தஞ்சம் புகுந்து விட்டேன்.