#009. கருத்தன எந்தை

9. காட்சி கொடு!

கருத்தன எந்தை தன் கண்ணன, வண்ண கனக வெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள் கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே வந்து என்முன் நிற்கவே.

சிவபிரானின் கண்களிலும் கருத்தினிலும் நிறைந்த; மேருவினைப் போன்று பெருத்த ஸ்தனங்களால் சம்பந்தருக்கு ஞானப் பால் அளித்துப் பேரருள் புரிந்த ; முத்து மாலையும், கரும்பு வில்லும், மலர்க் கணைகளும், அழகிய புன்முறுவலும் பொருந்திய தேவியே! நீ என் கண் முன் வா!