#022. கொடியே, இளவஞ்சி

# 22. பிறவி வேண்டாம்!

கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே, மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலான தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

மென் கொடியே! பொற்கொம்பே! பழுத்த கனியே! வேதங்களின் நறுமணமே! இமயமலையில் உள்ள எழில் வாய்ந்த பிடியே! பிரமன் முதலான தேவர்களைப் பெற்ற அன்னையே! இனி நான் மீண்டும் மீண்டும் இறந்து பிறவாது என்னைத் தடுத்து ஆட்கொள்வாய்!