தேவியின் உறுதி மொழி (16)

# 29.

ரோக3னசே’ஷா னபஹம்சி துஷ்டா
ருஷ்டா து காமான் ஸகலானபீ4ஷ்டான் |
த்வாமாச்’ரிதானாம் ந விபன் நராணாம்
த்வாமாச்’ரிதா ஹ்யாச்’ரயதாம் ப்ரயாந்தி ||

தேவி! நீ சந்தோஷம் அடைந்தால் எல்லா வியாதிகளையும் அறவே போக்குகின்றாய்! கோபத்தினால், வேண்டப்படும் ஆசைகளை எல்லாம் அறவே ஒழிக்கின்றாய்! உன்னை அண்டியவர்களுக்கு எந்த விபத்தும் நேராது. உன்னை அண்டுபவர்கள் பிறர் அண்டுதற்குத் தகுதி அடைத்து விடுகின்றார்களே!

# 30

ஏதத் க்ருதம் யத் கத3னம் த்வயாத்3ய
த4ர்மத்3விஷம் தே3வி மஹா ஸுராணாம் |
ரூபைரநேகைர் ப3ஹுதா4த்ம மூர்த்திம்
க்ருத்வம்பி3கே தத் ப்ரகரோதி கான்யா||

தேவி! தர்மத்தைப் பகைக்கும் கொடிய அசுரர்களை வதைக்க, உன் மூர்த்தியையே பலவாக்கி, பல வடிவங்களில் பல அசுரர்களை அழித்து போல, உன்னைத் தவிர யாரால் செய்ய இயலும் ?

Leave a comment