#044. தவளே இவள்

# 44. மேலான தெய்வம் வேறு இல்லை!

தவளே இவள்; எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினாள்; ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்;
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய் தொண்டு செய்தே.

இந்த அம்பிகையே எங்கள் சிவபிரானின் மங்கலமனை மாட்சித் துணைவி ஆவாள். இவளே படைப்பு முறையில் சிவபிரானின் தாயும் ஆவாள். ஆகையால் இவளே அனைத்து தெய்வங்களுக்கும் மேலான தலைவி ஆவாள். இனிமேல் இவளுக்கும் மேலான தெய்வம் உண்டு என்று நம்பி அதற்குத் தொண்டுகள் செய்து துவளமாட்டேன்!