#048. சுடரும் கலைமதி

# 48. பிறவித்தளை நீங்கும்.

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போதிருப்பார், பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

ஒளி வீசும் பிறை சூடிய, சடை முடியுடைய, சிவ பிரான் என்னும் செம் பவளக் குன்றில் இணைந்து படரும், இயற்கையிலேயே மணம் கமழும், பசுங்கொடியாகிய தேவியை மனதில் பதித்து; துன்பம் தவிர்த்து, ஒரு நொடிப் பொழுதேனும் யோகநிலையில் இருப்பவர்கள் சதையும், ரத்தமும் தோய்ந்த கருப்பையினுள் மீண்டும் புகுவாரோ?