# 38. உலகீர் உணர்வீர்!
பவளக் கொடியிற் பழுத்த செவ்வாயும், பனி முறுவல்
தவளத் திருநகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.
பவளக் கொடியைக் காட்டிலும் பழுத்துச் சிவந்த வாயையும், குளிர்ந்த புன்னகையையும் துணையாகக் கொண்டு; எம்பெருமானை அவர் யோகநிலை கெடும் படி போர் செய்த; நகில்களின் பாரத்தால் துவளும் உடுக்குப் போன்ற இடையினையுடைய தேவியை வணங்கி, விண்ணுலகை ஆளும் பேற்றினைப் பெறுவீர்களாகுக!