# 17. பதியையும் வென்றவள்!
அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தர வல்லி, துணை இரதி
பதிசயமானது அபசயமாக, முன் பார்த்தவர் தம்
மதிசயம் ஆகவன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?
வியப்பூட்டும் வடிவழகி; தாமரை மலர்கள் வணங்கும் அழகிய முகம் உடையவள்; ரதிபதியாகிய மன்மதனின் வெற்றியானது தோல்வியாக மாறவும் , சிவபிரானின் நெற்றிக் கண் பார்வை வெற்றி அடையவும், இறைவனின் இடப்பாகத்தைக் கவர்ந்து கொண்டாள்.