#057. ஐயன் அளந்தபடி

# 57. உன் மெய்யருள்?

ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய, அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசும்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய்; இதுவோ உந்தன் மெய்யருளே?

எம்பெருமான் அளந்து கொடுத்த இருநாழி நெல்லைக் கொண்டு உலகம் எல்லாம் உய்யும் பொருட்டு அறம் வளர்க்கும் நாயகியாகிய உன்னை வணங்கி; ஒருவரிடம் சென்று, பைந்தமிழ் பாமாலை புனைந்து, பொய்யும் மெய்யும் புகலும்படி என்னை அமைத்து விட்டாய். இதுதான் உந்தன் மெய்யருளா?