#006. சென்னியது உன் பொன்

# 6. நினைவும் நீயே!  செயலும் நீயே!

சென்னியது உன்பொன் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம், சிந்தூர வண்ணப் பெண்ணே
முன்னிய நின்னடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

சிவந்த திருமேனியை உடைய தேவியே, உன் பொற்றாமரைத் திருவடிகளை என் தலை மீது அணிந்துள்ளேன். உன் மூல மந்திரம் என் உள்ளத்திலே நிலைத்துள்ளது. உன் ஆகம நெறிகளை உன் தொண்டர்களுடன் கூடி நான் பின்பற்றுகின்றேன்.