#090. வருந்தாவகை

# 90. கிடைக்காத பொருள் எது?

வருந்தாவகை, என் மனத் தாமரையில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை, விண்மேவும் புலவர்க்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே!

விண்ணோர்களுக்கு திருபாற்கடலில் கிடைத்த அமுதத்தை வழங்கக் காரணமான தலைவி இவள். இனியும் யான் பிறவித் துன்பத்தில் வருந்திடாத வண்ணம் என் இதயத் தாமரையில் எழுந்தருளி, பழைய இடமாக இதில் விளங்குகின்றாள். ஆதலால் இனி எனக்கு கிடைக்காதது என்று எந்தப் பொருளுமே இல்லையே.