#064. வீணே பலிகவர்

# 64. உள்ளத்தின் உறுதி.

வீணே பலிகவர் தெய்வங்கள் பால் சென்று, மிக்க அன்பு
பூணேன்; உனக்கு அன்பு பூண்டுகொண்டேன்; நின் புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு பொழுதும்; திருமேனிப்ரகாசம் அன்றிக்
காணேன் , இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.

எம்பிராட்டியே! உன் மேல் பக்தி கொண்டு விட்டேன். அதனால் வீணாகப் பலி கேட்கும் மற்ற தெய்வங்களிடம் அன்பு கொள்ள மாட்டேன். உன் புகழை அன்றி வேறு ஒரு தெய்வத்தின் புகழைப் பேசமாட்டேன். நிலத்திலும், வானத்திலும், நான்கு திசைகளிலும் உன் திருமேனிப் பிரகாசம் அன்றி வேறு எதையும் நான் காண மாட்டேன்.