#084. உடையாளை

# 84 . பிறவிப்பிணி நீங்கும்.

உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண் நூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே.

என்னைத் தன் உடைமையாக்கிக் கொண்டவளை; சிவந்த பட்டாடை உடுத்தியவளை; ஒளிரும் பிறை சூடின செஞ்சடையாளை; வஞ்சகர் நெஞ்சினை அடையாதவளை; நுண்ணிய நூல் போன்ற இடையினை உடையவளை; சிவபிரானின் இடப் பாகத்தில் இருப்பவளை;  என்னைப் பிறவிப் பிணியில் இருந்து மீட்டுக் காத்தவளை; நீங்களும் வணங்கி வழிபட்டால் உங்கள் பிறவிப் பிணியும் நீங்கி விடும்.