#101. நூற் பயன்

# 101. நூற் பயன்.

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, அங்கையில் பாசாங்குசமும் கருப்பு வில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே.

அண்டம் எல்லாவற்றிலும் பூத்து இருப்பவளை, மாதுளம் பூ நிறத்தினளை, அனைத்து உலகங்களையும் காக்கின்றவளை, அங்குச பாசமும் அழகிய வில்லையும் ஏந்திய கரங்களை உடையவளை, மூன்று கண்களை உடையவளை, அபிராமி அன்னையைத் தொழுபவர்களுக்கு என்றும், எங்கும், எப்போதும் எந்தத் தீங்கும் நேராது!  நேராது! நேராது!

அன்னையின் புகழ் வாழ்க! வளர்க! நம் அனைவரையும் காக்க!
உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி.