#093. நகையே இது இந்த

# 93. கற்பனையைக் கடந்தவள்.

நகையே இது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு.
முகையே முகிழ்முலை, மானே முதுகண், முடிவுஇல்; அந்த
வகையே பிறவியும்; வம்பே, மலைமகள் என்பதும், நாம்;
மிகையே, இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே. 

இந்த உலகங்களை எல்லாம் பெற்ற அன்னை; அகிலாண்டத்தின் நாயகி; அவளுக்கு தாமரை மொட்டுப் போன்ற நகில்கள்; மானை ஒத்த மருண்ட விழிகள்; அவளுக்கு முடிவும் இல்லை; பிறவியும் இல்லை; அத்தகையவளை நாம் மலைஅரசனின் மகள் என்பது மிகையே! ஒன்றுக்கு ஒன்று முரணாகக் காட்சி அளிக்கும் இந்த விந்தைகள். இவளது உண்மையான தன்மையை உணர்ந்து இவளை விரும்புவதே சரியான வழி.