# 75. இனிப் பிறவி இல்லையே!
தங்குவர், கற்பகத் தாருவின் நிழலில்; தாயார் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும்
பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.
கற்பக நிழலில் இருக்கும் அன்பர்கள்; மலைகளையும், கடல்களையும், பதினான்கு உலகங்களையும் படைத்த திருவயிற்றையும், மணம் கமழும் கூந்தலையும் உடைய, அபிராமி அன்னையின் திருமேனியைத் தியானம் செய்வார்களே ஆயின், மீண்டும் ஒரு தாய் வயிற்றில் நுழைந்து பிறக்கும் பிறவிப் பிணியில் உழல மாட்டார்கள்.