#083. விரவும் புது மலர் இட்டு

# 83 . இந்திரப் பதவி கிடைக்கும்.

விரவும் புது மலர் இட்டு, நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்,
பரவும் பதமும் அயிராவதமும், பகீரதியும்,
உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.

அன்னையே! நறுமணம் கமழும் உன் திருவடித் தாமரைகளில், தேன் சிந்தும் புத்தம் புதிய மலர்களை இட்டு, இரவும் பகலும் உன்னை வழிபடுபவர்கள், அடுத்த பிறவியில் வானவர் தொழும் இந்திரப் பதவியையும், வெள்ளை யானையையும், ஆகாச கங்கையையும், வஜ்ஜிராயுதத்தையும், கற்பகச் சோலையையும் பெற்றிடும் பெரும் பேறு அடைவார்கள்.