#032. ஆசைக்கடலில்

# 32. என்னே உன் நேசம்!

ஆசைக்கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே! 

இறைவனின் இடப்பாகத்தில் இடம்பெற்ற தேவியே! ஆசைக் கடலில் அகப்பட்டு, இரக்கம் என்பதே இல்லாத எமனின் பாசக்கயிற்றால் மரணமடைய இருந்த என் தலை மீது, உன் திருவடித் தாமரைகளை நீயே வலிய வந்து சூட்டி என்னை ஆட்கொண்டாய்! உன் உள்ளன்பை நான் என்னென்று போற்றிப் புகழுவேன்?