#068. பாரும், புனலும், கனலும்

# 68. தவம் உடையவர் பெறும் தனம்.

பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்திலும், நிலம், நீர், தீ, காற்று, வானம் என்னும் ஐம்பூதங்களிலும் கலந்து நிற்கும் சிவகாம சுந்தரியின் அழகிய சிறு திருவடிகளில் அடைக்கலம் புகுதல் என்கின்ற தவத்தைச் செய்பவர்களுக்குக் கிடைக்க முடியாதது என்ற எந்த செல்வமும் இல்லை.