#029. சித்தியும், சித்தி தரும்

# 29. திருமேனியின் சிறப்பு!

சித்தியும், சித்தி தரும் தெய்வமும் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.

அணிமா முதலான அஷ்டசித்திகளும்; அந்த சித்திகளின் தெய்வமாகத் திகழும் பராசக்தியும்; அந்த சக்தி தழைக்கும் பரமசிவனும்; அந்த சிவத்தைக் குறித்துத் தவம் செய்பவர் அடையும் முக்தியும்; அந்த முக்தியின் விதையும்; அந்த விதையிலிருந்து முளைத்து எழுந்த ஞானமும்; அந்த ஞானத்தில் வியாபித்துக் காக்கும் பெருமையும்; ஆகிய அனைத்துமே அபிராமியே!