#027. உடைத்தனை வஞ்ச

# 27. எங்னம் புகழ்வேன்?

உடைத்தனை வஞ்சப் பிறவியை,  உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட் புனலால்
துடைத்தனை சுந்தரி, நின் அருள் ஏதென்று சொல்லுவதே!

அபிராம சுந்தரியே! உள்ளம் உருகும் அன்பை என்னிடம் படைத்துவிட்டாய். 
உன் பதகமலங்களைச் சென்னியில் சூடும் பணியை என்னிடம் ஒப்படைத்துவிட்டாய்.
நெஞ்சில் உள்ள மாசுக்களை எல்லாம் உன் அருட்புனால் துடைத்துவிட்டாய்.
மாயப் பிறவி என்னும் கடலின் கரையை உடைத்துவிட்டாய்.
உன் அருளை நான் எங்ஙனம் புகழ்வேன்?