#061. நாயேனையும் இங்கு

# 61. அறிவு தந்தாய்!

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்; நின்னை உள்ள வண்ணம்  

பேயேன் அறியும் அறிவு தந்தாய்; என்ன பேறு பெற்றேன்
தாயே, மலைமகளே, செங்கண்மால் திருத் தங்கச்சியே!

அன்னையே! மலைமகளே! திருமாலின் தங்கையே! நாயேனையும் ஒரு பொருட்டாக மதித்து, விரும்பி வந்து, நான் நினைக்காத பொழுதினில் என்னை ஆட்க்கொண்டுவிட்டாய். உன்னை உள்ளபடி அறியும் ஞானத்தையும் தந்தாய். இதற்கு நான் செய்த நற்செயல் தான் என்ன?