#005. பொருந்திய முப்புரை

5. திருவடிப் பேறு.

பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே.

மூவுலகங்களின் சிறப்புக்கள் எல்லாம் பெற்றவளும்; செப்புப் போன்ற அழகிய நகில்களின் பாரத்தால் துவளும் கொடி போன்ற இடையை உடைய மனோன்மணியும்; சிவபிரான் அருந்திய நஞ்சையே அமிர்தமாக மாற்றிய உமாதேவியும்; ஞானப் பெருவெளியாக விளங்கும் பேரழகியும் ஆன அபிராமி அன்னையின் திருவடிகள் என் தலை மீது பதிந்து உள்ளன.