#026. ஏத்தும் அடியவர்

# 26. எத்தனை கருணை!

ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்ததும்
காத்தும் அழித்தும் திரிபவராம்; கமழ் பூக் கடம்பு
சாத்தும் குழல் அணங்கே! மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கும் புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே! 

மணம் கமழும் கடம்ப மலர்களைச் சூடிய கூந்தைலை உடைய அன்னையே! உன்னைப் போற்றும் அடியார்கள் பதினான்கு உலகங்களையும் படைத்ததும், காத்தும், அழித்தும் திரியும் மும்மூர்த்திகள் ஆவர். ஆயினும் மணம் மிகுந்த உன் திருவடிகளுக்கு, நான் சாத்தும் புன்மொழிகளால் ஆன என் பாமாலையையும் நீ ஏற்றுக் கொள்வது எனக்கே நகைப்பைத் தருகின்றதே!