தேவியின் உறுதி மொழி (25)

# 49.

சா’கம்ப4ரீதி விக்யாதிம் ததா3 யாஸ்யாம்யஹம் பு4வி |
தத்ரைவ ச வதி4ஷ்யாமி து3ர்க்கமாக்2யம் மஹாஸுரம் ||

அப்போது பூமியில் நான் சாகம்பரீ என்று புகழ் அடைவேன்.
அதே காலத்தில் துர்க்கமன் என்னும் கொடிய அசுரனையும் வதம் செய்வேன்.

# 50

து3ர்க்கா3 தே3விதி விக்2யாதம் தன்மே நாம ப4விஷ்யதி |
புனச்’சாஹம் யதா3 பீ4மம் ரூபம் க்ருத்வா ஹிமாச்சலே ||

அதனால் எனக்கு துர்க்காதேவி என்னும் சிறந்த பெயர் ஏற்படும்.
மீண்டும் இமயமலையில் முனிவர்களைக் காப்பாற்ற ஒரு பயங்கரமான
வடிவத்தை எடுத்துக் கொண்டு ராக்ஷசர்களை அழிப்பேன்.

Leave a comment