#041. புண்ணியம் செய்தனமே

 

# 41. பத்ம பாதம் பதித்தவள்.

புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.  

புதிய பூங்குவளை போன்ற கண்களை உடையவளும், பொன்னர் மேனியரும் மங்கை ஒரு பாகனாக இணைந்து வந்து; தன் அடியார்கள் இடையே நம்மையும் இருக்கச் செய்து; திருவடித் தாமரைகளையும் தலை மீது பதித்திட என்ன புண்ணியம் செய்துள்ளேமோ நெஞ்சமே !