#049. குரம்பை அடுத்து

# 49. அபயம் அளிப்பாய்!

குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து, ‘அஞ்சல்’ என்பாய்
நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே.

நரம்புகளில் பிறக்கும் இசை வடிவாக விளங்கும் நாயகியே! உடம்பு என்னும் கூட்டிலே குடி புகுந்துள்ள என் உயிர், கொடிய கூற்றுவன் அமைத்த எல்லையில் உள்ளம் கலங்கும் வேளையில், அரம்பையர் முதலான தேவமங்கையர் சூழ வந்து உன் வளைக் கரத்தினால், ‘அஞ்சேல்!’ என எனக்கு அபயம் அளிப்பாய்.