#008. சுந்தரி எந்தை

8. சிந்தையில் சேவடி.

சுந்தரி, எந்தைத் துணைவி, என் பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்தூர வண்ணத்தினாள், மகிடன் தலை மேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கந்தரி, கைத் தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

திரிபுர சுந்தரி, என் பிரானின் மனைவி, என் பந்த பாசங்களை அகற்றும் சிவந்த மேனியள், மகிடனின் தலைமீது நிற்பவள், நீலி, நித்திய கன்னிகை, பிரமன் கபாலத்தைத் தாங்கிய திருக்கரம் உடையவள், அவள் மலர்ப் பாதங்கள் என் மனதில் நிலைத்துள்ளன.